ஆப்நகரம்

தற்கொலையை பேஸ்புக்கில் நேரலை செய்த இளைஞரால் அதிர்ச்சி; கடைசி நொடியில் பரபரப்பு!

சமூக வலைத்தளத்தில் தற்கொலையை நேரலை செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 28 Feb 2018, 3:36 pm
டெல்லி: சமூக வலைத்தளத்தில் தற்கொலையை நேரலை செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil youth live streaming suicide bid rescued
தற்கொலையை பேஸ்புக்கில் நேரலை செய்த இளைஞரால் அதிர்ச்சி; கடைசி நொடியில் பரபரப்பு!


டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் ஆஷ்ரம் அருகே உள்ள வீட்டைச் சேர்ந்தவர் அனிகேத் வெர்மா(26). இவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது, தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார். தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

பின்னர் பேஸ்புக்கில் தற்கொலை செய்வதை நேரலையாக ஒளிபரப்பத் தொடங்கினார். தனது வேலை மற்றும் சரியான வாய்ப்புகள் அமையாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன்.

சமீபத்தில் காதலில் தோல்வியால் மனமுடைந்துள்ளேன். எனவே தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார். நள்ளிரவு 1.30 மணியளவில் பேஸ்புக் நேரலையை தொடங்கினார்.

இதனை இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, வெர்மாவின் நண்பர் ரீனா பேஸ்புக்கில் பார்த்துள்ளார். உடனே அனிகேத்தின் சகோதரர் அமீத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

இவர் தெற்கு டெல்லி சடர்பூரில் உள்ள நண்பரின் வீட்டில் இருந்துள்ளார். அவர் தங்கள் வீட்டின் அருகே உள்ள திலக்கிடம் கூறி உதவி கேட்டுள்ளார். அதற்குள் வெர்மா, மின் விசிறியில் கட்டிய கழுத்தில் கயிற்றை இறுக்கி சேரில் ஏறியுள்ளார்.

உடனே வெர்மா வீட்டின் கதவை உடைத்து, அறைக்கு நுழைந்து காலை தூக்கி காப்பாற்றியுள்ளனர். உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வெர்மாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Youth live-streaming suicide bid rescued.

அடுத்த செய்தி