சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று மாலை தொடங்கியது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தீவுத்திடல், பட்டாசு கடைகளின் விற்பனை கண்காட்சிக்கு அனுமதி கோரப்பட்டது. சுமார் 120 கடைகள் அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், 58 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு, இன்று முதல் வருகிற 30-ம் தேதி வரை விற்பனை நடைபெறவுள்ளது.
அதேபோல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, மேடவாக்கத்தில் உள்ள மைதானம் ஆகிய இடங்களிலும் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீவுத் திடலில் பட்டாசு வாங்குவதற்காக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேர ஜெனரேட்டர் வசதி, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பட்டாசு வாங்க வருவோர் வசதிக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவைகள், தீவுத்திடல் 6-ம் எண் நுழைவு வாயில் முன்பு நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடல் பகுதியில் உள்ள 8 நுழைவு வாயில்களையும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகனம் நிறுத்துமிடம், மழைக்காக ஒதுங்கும் இடம், பாதுகாப்புக்காக தீயணைப்பு வண்டிகள், அனைத்து கடைகளும் காப்பீடு என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை தொடங்கிய விற்பனை, நாளைமுதல் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பும் தீபாவளி அன்றும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வித்தியாசமான எண்ணற்ற பட்டாசுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விண்ணில் ஒளிரும் பல்வகை வாண வெடிகள், சரவெடிகள், கலர் மத்தாப்பு என பல ரக பட்டாசுகள் இங்கு இடம் பெற்றுள்ளது.
Crackers sale in Theevu thidal starts
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தீவுத்திடல், பட்டாசு கடைகளின் விற்பனை கண்காட்சிக்கு அனுமதி கோரப்பட்டது. சுமார் 120 கடைகள் அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், 58 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு, இன்று முதல் வருகிற 30-ம் தேதி வரை விற்பனை நடைபெறவுள்ளது.
அதேபோல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, மேடவாக்கத்தில் உள்ள மைதானம் ஆகிய இடங்களிலும் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீவுத் திடலில் பட்டாசு வாங்குவதற்காக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேர ஜெனரேட்டர் வசதி, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பட்டாசு வாங்க வருவோர் வசதிக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவைகள், தீவுத்திடல் 6-ம் எண் நுழைவு வாயில் முன்பு நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடல் பகுதியில் உள்ள 8 நுழைவு வாயில்களையும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகனம் நிறுத்துமிடம், மழைக்காக ஒதுங்கும் இடம், பாதுகாப்புக்காக தீயணைப்பு வண்டிகள், அனைத்து கடைகளும் காப்பீடு என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை தொடங்கிய விற்பனை, நாளைமுதல் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பும் தீபாவளி அன்றும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வித்தியாசமான எண்ணற்ற பட்டாசுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விண்ணில் ஒளிரும் பல்வகை வாண வெடிகள், சரவெடிகள், கலர் மத்தாப்பு என பல ரக பட்டாசுகள் இங்கு இடம் பெற்றுள்ளது.
Crackers sale in Theevu thidal starts