ஆப்நகரம்

தீபாவளி அன்று கடமையில் ஈடுபட்ட போலீஸாருக்கு பள்ளி மாணவர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு

தீபாவளி அன்று அனைவரும் குடும்பத்தினரோடு ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் அன்றைய தினத்திலும் பணியில் ஈடுபட்டு மக்களின் மகிழ்ச்சியில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கும் பணி செய்த போலீஸாரை பாராட்டி அவர்களுக்கு பள்ளி மாணவர்கள் இனிப்பு வழங்கினர்.

TOI Contributor 30 Oct 2016, 2:45 pm
தீபாவளி அன்று அனைவரும் குடும்பத்தினரோடு ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் அன்றைய தினத்திலும் பணியில் ஈடுபட்டு மக்களின் மகிழ்ச்சியில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கும் பணி செய்த போலீஸாரை பாராட்டி அவர்களுக்கு பள்ளி மாணவர்கள் இனிப்பு வழங்கினர்.
Samayam Tamil school students deepavali wishes and share the sweet to police
தீபாவளி அன்று கடமையில் ஈடுபட்ட போலீஸாருக்கு பள்ளி மாணவர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு


ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், தீபாவளியன்று அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நேரில் சந்தித்து, மக்களுக்கு அவர்கள் செய்யும் சேவையை பாராட்டி அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், காவலர்கள் மட்டும் கடமையில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு எந்த இடையூறும் நேராதவாறு பார்த்துக் கொண்டு காவலர்களை நினைத்து பெருமையடைவதாக, காவலர்களை போலவே நாட்டின் எல்லையில் நாட்டு மக்கள் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் பணி மிகவும் வணங்கத்தக்கது என மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் நேரில் வந்து இனிப்பு வழங்கியது, எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருந்ததாகவும், அவர்களை பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

கீழக்கரையை சேர்ந்த கண்ணாடி வாப்பா பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கீழக்கரை டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அங்கு அனைத்து காவலர்களுக்கும் வாழ்த்து கூறி இனிப்புகள் பகிர்ந்தனர். சிறப்பு காவல் பணிக்காக வந்திருந்த அரியலூர் ஏ.டி.எஸ்.பி. அசோக்குமாரை வாழ்த்தியதோடு, வெளியிடப் பணிக்காக சென்றிருந்த டி. எஸ். பி. மகேஸ்வரி அவர்களை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல, கீழக்கரை, திருப்புல்லாணி பகுதிகளில் செக்போஸ்டில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு மாணவர்கள் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

அடுத்த செய்தி