ஆப்நகரம்

குடிமக்களின் தீபாவளி கொண்டாட்டத்தால் ரூ. 243 கோடி வசூல்

தீபாவளி பண்டிகையை குடிமக்கள் குதுகலமாக குடித்து கொண்டாடியதால் அரசுக்கு வெறும் 2 நாட்களில் ரூ. 243 கோடி வசூலாகியுள்ளது.

TNN 30 Oct 2016, 5:38 pm
சென்னை : தீபாவளி பண்டிகையை குடிமக்கள் குதுகலமாக குடித்து கொண்டாடியதால் அரசுக்கு வெறும் 2 நாட்களில் ரூ. 243 கோடி வசூலாகியுள்ளது.
Samayam Tamil tasmac diwali liquor sells collections rs 243 cr
குடிமக்களின் தீபாவளி கொண்டாட்டத்தால் ரூ. 243 கோடி வசூல்


தமிழகத்தில் 6 ஆய்ரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தமிழக அரசுக்கு தினமும் சராசரியாக ரூ. 68 கோடி வருமானம் கிடைத்து வருகின்றது.

விடுமுறை நாட்கள், ஞாயிறு தினங்களில் 95 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை ஆகின்றது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று (29ம் தேதி) 135 கோடி ரூபாய்க்கும், அதற்கு முதல் நாள் (28ம் தேதி)108 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.2 சதவீதம் விற்பனை கூடுதல் என டாஸ்மாக் தெரிவித்துள்ளது. ஆனால் 2014ம் ஆண்டு தீபாவளியின்போது ரூ. 142 கோடிக்கும், அதற்கு முதல் நாள் ரூ. 100 கோடிக்கும் மது விற்பானையானது.

அடுத்த செய்தி