ஆப்நகரம்

திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் : ஸ்டாலின்

திமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்து திமுக., உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற உதவ வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 3 Oct 2016, 11:13 pm
விழுப்புரம் : திமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்து திமுக., உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற உதவ வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil stalin asks partymen to strive hard for dmks victory in tn local body polls
திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் : ஸ்டாலின்


திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.,வான கே பொன்முடியின் உறவினரின் திருமணத்திற்கு சென்ற திமுக பொருளாலர் ஸ்டாலின், அங்கு வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசினார்.

ஸ்டாலின் பேசியதாவது : கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. அப்போது நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது. ஆனால் தற்போது நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றியை பரித்திட முடியும்.

எம்.எல்.ஏ.,க்களால் கூட சமாளிக்க முடியாத, சரி செய்ய இயலாத பல சமூக பிரச்னைகளை கிராமம், பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், டவுன் பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் தான் தீர்க்க முடியும். இந்த அதிகாரிகளை தேர்ந்தெடுக்கப்பட உள்ள உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது அவர்களின் கடமையாகும். உள்ளாட்சி தேர்தலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைமை விரைவில் அறிவிக்கும்.

முல்லை பெரியாறு, காவிரி விவகாரம், பாலாறு பிரச்னை ஆகிய பிரச்னைகளில் அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் ஒற்றுமையோடு தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருந்து பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த செய்தி