ஆப்நகரம்

டிரம்ப்பை எங்களுக்கு பிடிக்கவில்லை: போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்கள் கைது

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை பிடிக்காமல், போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

TNN 10 Nov 2016, 2:55 pm
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை பிடிக்காமல், போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil 15 arrested in new york for disorderly conduct protest against trump
டிரம்ப்பை எங்களுக்கு பிடிக்கவில்லை: போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்கள் கைது


அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதன் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று, 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போல்டன் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, டிரம்ப் தங்கள் அதிபர் இல்லை என்று கோஷங்கள் எழுப்பினர். சியட்டல் நகரில் போராட்டக்காரர்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

நியூயார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் டிரம்ப்பின் நிலைப்பாடு தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், அவரது வெற்றியை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

15 Arrested in New York For Disorderly Conduct protest against trump.

அடுத்த செய்தி