ஆப்நகரம்

ஆசிய விளையாட்டு: பிரிட்ஜில் இந்தியாவுக்கு 15வது தங்கம்

ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பிரணாப் பர்தன் மற்றும் ஷிப்நாத் சர்கார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

Samayam Tamil 1 Sep 2018, 2:00 pm
ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பிரணாப் பர்தன் மற்றும் ஷிப்நாத் சர்கார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
Samayam Tamil bridge-twitter-1535789529


18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறுகிறது.

இதில் இன்று ஆண்களுக்கான பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரணாப் பர்தன் (60 வயது) மற்றும் ஷிப்நாத் சர்கார் (56 வயது) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் 384 புள்ளிகளைப் பெற்ற அவர்கள் முதல் இடத்தைப் பெற்று தங்கம் வென்றுள்ளனர். மற்றொரு இந்திய இணையான சுமித் முகர்ஜி மற்றும் தெபப்ரதா மஜூம்டெர் ஆகியோர் 333 புள்ளிகளுடன் 9வது இடத்தைப் பெற்றனர்.

இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 67 பதங்கங்களை இந்தியா பெற்றிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்