ஆப்நகரம்

தங்க மங்கை வினேஷ் போகத்துக்கு அரசு வேலை: ரூ,. 3 கோடி பரிசு!

ஆசிய விளையாட்டு போட்டிகளின் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இவருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 3 கோடி பரிசு வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2018, 7:48 pm
புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இவருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 3 கோடி பரிசு வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil 8


இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகள் செப்டம்பர் 2 ல் முடிவரையும். நடைபெறவுள்ளது. இதில் போட்டியில் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கினர்.

ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலில் இடம் இடம் பெற்றுள்ள இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

வரலாறு படைத்த வினேஷ்.....
இந்நிலையில் பெண்கள் மல்யுத்த ஃப்ரி ஸ்டைல் 50 கி.கி., எடைப்பிரிவு ஃபைனலில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூகி இரியை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் 6-2 என யூகியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டின் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் வினேஷ். இது இந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கப்பதக்கமாகும்.
அரசு வேலை... ரூ. 3 கோடி பரிசு.....
இந்நிலையில் இவருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்படும் என ஹரியான விளையாட்டுத்துறை அமைச்சர், அணில் விஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்