ஆப்நகரம்

வண்ணமயமாக நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள்!

ஆசிய விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது.

Samayam Tamil 2 Sep 2018, 8:57 pm
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது.
Samayam Tamil 5


இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தினர் . இந்நிலையில் இதன் நிறைவு விழா இன்று வண்ணமயமாக நடந்தது.

இதில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்கள் என ஒட்டுமொத்தமாக 69 பதக்கங்களை பெற்றுள்ளனர். இதையடுத்து இதுவரை ஆசிய விளையாட்டு போட்டிகள் இல்லாத அளவு அதிக பதக்கங்களை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

அடுத்தது ஒலிம்பிக்....
இந்நிலையில் இந்த போட்டிகளை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் அஹமது நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து வரும் 2032 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நாடுகளின் பட்டியலுக்கான ஏலத்தில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தோனியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், ஜப்பான், சீனா, தென் கொரியாவுக்கு பின் இந்த பெருமை பெறும் நான்காவது ஆசிய நாடு என்ற பெருமை பெறும். வரும் 2020 டோக்கியோ, 2024 பாரீஸ், 2028 லாஸ் ஏஞ்சலஸ் நகரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்