ஆப்நகரம்

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை - முதல்வர்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Sep 2018, 2:36 pm
சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil squash-players


ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா, ஜகார்த்தா பாம்பெம்பங் நகரில் நடைப்பெற்றது. இன்று அதன் நிறைவு விழா நடைப் பெற உள்ளது.

இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல், சுனாய்னா, ஜோஸ்னா சின்னப்பா ஆகிய 3 வீராங்கனைகளும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இவர்களுக்கு பதக்கம் வென்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளதோடு, தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்