ஆப்நகரம்

பதக்கம் வென்ற வீரர்களுக்கு இன்னும் செலவுக்கான தொகை கொடுக்கப்படவில்லை!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற வீரர்களுக்கு, செலவான தொகையை இதுவரை அரசு கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 25 Aug 2018, 6:56 pm
ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற வீரர்களுக்கு, செலவான தொகையை இதுவரை அரசு கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil 5513525398201825035551


18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங் நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினத்தில்நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. பெண்களுக்கான 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஹீனா சித்து வெண்கலம் பதக்கம் வென்றார். அதேபோல்இந்தியாவின் துடுப்பு படகு அணி தங்கம் வென்றுள்ளது.

இதனால் இந்தியா 6 தங்க பதக்கம் , 5 வெள்ளி பதக்கம், 17 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளது, மொத்தம் 28 பதக்கத்துடன் இந்தியா 9 வது இடத்தில் உள்ளது. இந்திய வீரர்களின் கடின முயற்சியால் பதக்கம் வென்றாலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டதற்கான செலவுத்தொகை இன்னும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு போரக்ஸ் கார்டு வழங்கப்பட்டாலும் அதில் பணம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்தியன் ஒலிம்பிக் அசோலியேஷனின் தலைமை அதிகாரி பி. எஸ் குஷ்வாஹா கூறுகையில்’ விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட போரக்ஸ் கார்டு கூடிய விரைவில் செயல்படுத்தப்படும். இந்த கார்டை டெல்லியிலிருந்துதான் செயல்படுத்த முடியும் என்பதால் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும். இன்று மாலையில்கூட செயல்படுத்தப்படலாம் என்று கூறினார்.

மேலும் வீரர்கள் போட்டிக்காக வெளிநாடு போனாலும் தினமும் 50 டாலர் அதாவது 3 ஆயித்து 488 ரூபாய் மட்டுமே தினப்படியாக கொடுக்கப்படுகிறது. இது வீரர்களுக்குபோதுமானதாக இருப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்