ஆப்நகரம்

காமன்வெல்த்: முதல் இடத்துக்கு முன்னேறும் ஸ்ரீகாந்த்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் பட்சத்தில் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசைப் பட்டியிலில் முதல் இடத்தைப் பிடிப்பார்.

Samayam Tamil 11 Apr 2018, 6:17 pm
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் பட்சத்தில் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசைப் பட்டியிலில் முதல் இடத்தைப் பிடிப்பார்.
Samayam Tamil kidambi-srikanth-twitter_806x605_81523095804


21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரீகாந்த் உலக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை நெருங்கியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் கலப்பு அணி பிரிவில் தங்கப்பதக்கம் வென்றால் ஆண்களுக்கான தனிநபர் தரவரிசையில் ஸ்ரீகாந்த் கிடாம்பி கிடாம்பி உலகின் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறுவார்.

டென்மார்க் வீரர் விக்டர் அக்ஸல்சென் 77,130 புள்ளிகளுடன் தற்போது முதல் இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இந்தோநேஷிய மாஸ்டர்ஸ் ஓபனில் காயம் காரணமாக விலங்கி அவர் சிகிச்சைக்காக நீண்ட நாள் ஓய்வில் உள்ளார். 76,895 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த் கிடாம்பி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றால் மேலும் 1,660 புள்ளிகளைப் பெற்று விக்டரைப் பின்னுக்குத் தள்ளி சிகரம் தொடுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்