ஆப்நகரம்

காமன்வெல்த்: இந்திய வீராங்கனை மீது தாக்குதல்

காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அவரது உறவினரின் வீட்டில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 14 Apr 2018, 7:18 pm
காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அவரது உறவினரின் வீட்டில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil 1523699999-Punam-Yadav-AP


தற்போது நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பூனம் யாதவ். இவர் இன்று (சனிக்கிழமை) வாரணாசியில் உள்ள ரொஹானியா என்ற இடத்தில் வசிக்கும் தனது அத்தை வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே பூனம் யாதவின் அத்தைக்கும் அண்டை வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பூனம் யாதவ் மீது அண்டை வீட்டார் கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

நீண்ட நாட்களாக பூனம் யாதவின் அத்தை வீட்டாருக்கும் அண்டை வீட்டாருக்கும் முன்விரோதம் இருப்பதாகவும் இதனால் ஏற்பட்ட வாக்குவாதமே பூனம் தாக்கப்பட்டதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
பூனம் யாதவ் சார்பில் ரொஹானியா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்