ஆப்நகரம்

காமன்வெல்த் போட்டி துவக்கம், குடியரசுத் தலைவர் வாழ்த்து!

காமன்வெல்த் போட்டி, இன்று ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் துவங்குவதையடுத்து, இந்திய வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 12:58 pm
காமன்வெல்த் போட்டி, இன்று ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் துவங்குவதையடுத்து, இந்திய வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil common wealt


ஒலிம்பிக் , ஆசிய விளையாட்டுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய விளையாட்டாக இருப்பது காமன்வெல்த் போட்டி. 1930ம் ஆண்டு முதன் முதலில் இந்த காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. கனடாவில் நடந்த இந்த போட்டியில் 400 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், தற்போது 21 வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் துவங்குகிறது.

11 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில், 71 நாடுகளில் இருந்து 6,600 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து 17 போட்டிகளில் 218 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்