ஆப்நகரம்

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் தேஜஸ்வினி சவந்த் வெள்ளிப்பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவந்த் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2018, 12:14 pm
கோல்ட் கோஸ்ட் : காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவந்த் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
Samayam Tamil thejas1


ஆஸ்திரேலியாவின், கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இன்று காலை நடந்த 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவந்த் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களுடன் தொடர்ந்து 3வது இடத்தில் நீடித்து வருகின்றது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்