ஆப்நகரம்

ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி வென்று இந்திய வீராங்கனைகள் சாதனை

இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளான தேஜஸ்வினி சவந்த் தங்கமும், அஞ்ஜும் மொட்கில் வெள்ளி பதக்கமும் வென்று சாதித்துள்ளனர்.

Samayam Tamil 13 Apr 2018, 9:20 am
இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளான தேஜஸ்வினி சவந்த் தங்கமும், அஞ்ஜும் மொட்கில் வெள்ளி பதக்கமும் வென்று சாதித்துள்ளனர்.
Samayam Tamil tejaswini


ஆஸ்திரேலியாவின், கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. 9வது நாளான இன்று இந்திய வீரர்கள் சிறப்பாக தொடக்கத்தை கொடுத்துள்ளனர்.

தங்கம், வெள்ளி பதக்கம்:
இன்று பெண்களுக்கான 50 மீ துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின்
தேஜஸ்வினி சவந்த் மொத்தம் 457.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இவருக்கு அடுத்ததாக இந்தியாவின் அஞ்ஜும் மொட்கில் 455.7 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.



முன்னதாக நேற்று நடந்த 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தேஜஸ்வினி சவந்த் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார்.
இதன் மூலம் இந்தியா 15 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்