ஆப்நகரம்

நம்பர் 1 ஸ்ரீகாந்த்: சுதர்சன் பட்நாயக் வாழ்த்து

உலக தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ள இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.

Samayam Tamil 12 Apr 2018, 8:20 pm
உலக தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ள இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.
Samayam Tamil index


இளம் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2017ஆம் ஆண்டில் 4 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்று வரலாறு படைத்தார். மேலும் தற்போது நடைப்பெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மொத்தம் 76,895 புள்ளிகளுடன் உலக அளவில் ஆண்களுக்கான தனிநபர் பேட்மிண்டன் தரவரிசையில் கிடாம்பி முதலிடத்தை எட்டியுள்ளார். இவருக்கு முன் 1980ஆம் ஆண்டு இந்தியாவின் பிரகாஷ் படுகோன் முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்த ஸ்ரீகாந்த் கிடாம்பியின் சாதனையைப் பாராட்டி மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார் சுதர்சன் பட்நாயக். உலகப் புகழ்பெற்ற இந்திய மணல் சிற்பக்கலைஞரான சதர்சன் அவ்வப்போது சமூக அக்கறையுடன் மணல் சிற்பங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் விளையாட்டுத்துறையில் சிகரம் தொட்ட இளம் வீரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்