ஆப்நகரம்

காமன்வெல்த்: 3வது தங்கம் வென்றார் சதீஷ் சிவலிங்கம்

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Samayam Tamil 7 Apr 2018, 12:17 pm
21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
Samayam Tamil 63652016


ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 5ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற பளு தூக்கும் போட்டியின் 77 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் கலந்துகொண்டு முதல் இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார். ஏற்கெனவே 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருந்த இந்தியா, தற்போது 5 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் 3வது இடத்தை எட்டியுள்ளது.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார் சதீஷ். இதன் மூலம் தொடர்ந்து இரு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து தங்கம் வென்று அசத்தினார்.
#SathishSivalingam Tweets தமிழரான இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்