ஆப்நகரம்

திருப்பி அடித்தது திருப்புமுனை ஏற்படுத்திய இலங்கை அணி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

TNN 8 Jun 2017, 11:24 pm
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
Samayam Tamil champions trophy 2017 india beaten by sri lankas revenge batting performance
திருப்பி அடித்தது திருப்புமுனை ஏற்படுத்திய இலங்கை அணி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடக்கிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில் உள்ள இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இலங்கை அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் 125 ரன்கள் விளாசினார்.



பின்னர், 322 ரன்களை விரட்டிய இலங்கை அணி 48.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. 89 ரன்கள் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்த இளம் வீரர் குசால் மென்டிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இலங்கை இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பி பிரிவில் அரையிறுதி வாய்ப்பு பெறும் அணி எவை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியா தென் ஆப்பிரிக்காவையும், இலங்கை பாகிஸ்தானையும் கடைசி லீக் ஆட்டங்களில் எதிர்கொள்ளும். அப்போட்டிகளில் வெல்லும் இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். எனவே, அந்த இரு போட்டிகளும் காலிறுதிப் போட்டிகள் போலவே சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லாமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்