ஆப்நகரம்

ஓயாமல் இடைஞ்சல் செய்த மழை: ஆஸி., - நியூசி. அணிகள் ஏமாற்றம்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஓயாத மழை காரணமாக கைவிடப்பட்டது.

TNN 2 Jun 2017, 11:44 pm
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஓயாத மழை காரணமாக கைவிடப்பட்டது.
Samayam Tamil champions trophy australia new zealand match abandoned due to rain
ஓயாமல் இடைஞ்சல் செய்த மழை: ஆஸி., - நியூசி. அணிகள் ஏமாற்றம்


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடக்கிறது. இத்தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இன்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட ஆட்டம், 45 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இதில், நியூசிலாந்து எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 100 ரன்களும் ரான்சி 65 ரன்களும் எடுத்தனர். டெய்லர் 46 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசல்வுட் 52 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஹேஸ்டிங் 2 விக்கெட்டுகளும் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.



மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தொடங்க தாமதமானது. மேலும், அந்த அணிக்கு 33 ஓவர்களில் 235 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை விரட்டிய அந்த அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்திருந்தபோது, மூன்றாவது முறையாக மழை குறுக்கிட்டது. இந்த முறை கனமழை கொட்டி முழக்கியதால், ஆட்டத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால், ஆட்டம் முடிவு இல்லாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்