ஆப்நகரம்

இந்திய அணியின் பயிற்சிக்கு போதிய வசதி இல்லை: பிசிசிஐ குற்றச்சாட்டு

சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சிக்கு போதிய வசதி செய்துதரப்படவில்லை என்று பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளார்.

TOI Contributor 2 Jun 2017, 1:29 am
சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சிக்கு போதிய வசதி செய்துதரப்படவில்லை என்று பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil champions trophy india unhappy with edgbaston practice facility
இந்திய அணியின் பயிற்சிக்கு போதிய வசதி இல்லை: பிசிசிஐ குற்றச்சாட்டு


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் விராட கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 4ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி எட்க்பாஸ்டன் மைதானத்திற்கு அருகில் உள்ள மற்றொரு சிறிய மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் ரன்-அப் செய்யவதற்கு போதிய இடம் இல்லை என்று பிசிசிஐ குற்றம்சாட்டியுள்ளது.



உமேஷ் யாதவ், முகமது சமி, ஹர்திக் பாண்டியா போன்ற இந்திய பவுலர்கள் பயிற்சி மேற்கொள்வது கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மைதான நிர்வாகிகளிடம் புகார் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் நாளை நடைபெறும் போட்டிக்காக எட்க்பாஸ்டன் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதால் இந்திய அணிக்கு அங்கு பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக, 3ஆம் தேதி மட்டுமே இந்திய அணி போட்டி நடைபெறும் மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்