சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பின் பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது அநாகரிகமாக நடந்துகொண்டது கிரிக்கெட் ரசிகர்களை வெறுப்புக்குள்ளாகியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடக்கிறது. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தைப் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுடன் நடிகர் தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரலங்களும் கண்டுகளித்தனர்.
இப்போட்டியிங் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் குவித்தது. பின் டக்வொர்த் லீவிஸ் முறையில் 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 164 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது. 124 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை மண்ணைக் கவ்வ வைத்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு இரு அணி கேப்டன்களும் இணைந்து பேட்டியளித்தனர். பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டியின் போது ப சொல்லாமல் கொள்ளாமல் நழுவிச்சென்றார். பேட்டி முடிந்த பிறகு பேட்டி காண்பவரிடம் நன்றி சொல்லி விடைபெறும் நாகரிகமான வழக்கத்தை பின்பற்றாமல் அநாகரிகமாக நடந்துகொண்ட அவர் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடக்கிறது. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தைப் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுடன் நடிகர் தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரலங்களும் கண்டுகளித்தனர்.
இப்போட்டியிங் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் குவித்தது. பின் டக்வொர்த் லீவிஸ் முறையில் 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 164 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது. 124 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை மண்ணைக் கவ்வ வைத்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு இரு அணி கேப்டன்களும் இணைந்து பேட்டியளித்தனர். பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டியின் போது ப சொல்லாமல் கொள்ளாமல் நழுவிச்சென்றார். பேட்டி முடிந்த பிறகு பேட்டி காண்பவரிடம் நன்றி சொல்லி விடைபெறும் நாகரிகமான வழக்கத்தை பின்பற்றாமல் அநாகரிகமாக நடந்துகொண்ட அவர் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார்.