ஆப்நகரம்

அடாவடி ஜேசனுக்கு அபராதம்....: ஃபைனல் தடையில் எஸ்கேப்!

லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில், அம்பயரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜேசன் ராய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jul 2019, 2:49 pm
இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ஃபைனலுக்கு, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதில் இங்கிலாந்து அணி அரையிறுதியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
Samayam Tamil Jason Roy


அடவாடி ராய்:
இப்போட்டியில் இங்கிலாந்து துவக்க வீரர் ஜேசன் ராய்க்கு, அம்பயர் குமார் தர்மசேனா, தவறுதலாக அவுட் கொடுத்தார். இதனால் கடுப்பான ராய், அம்பயருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

தப்பிய தடை:
இதனால் ஃபைனல் போட்டியில் ஜேசன் ராய்க்கு தடைவிதிக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனால், ஐசிசி., இவருக்கு 30 சதவீதம் மட்டும் அபராதம் விதித்துள்ளது. இதனால் ஃபைனல் போட்டியில் பங்கேற்காமல் இருப்பதில் இருந்து ராய் தப்பினார்.


தவிர, தன் தவறை ராய் ஒப்புக்கொண்டால் அவர் எவ்வித விசாரணைக்கும் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்