ஆப்நகரம்

லண்டன் சென்றடைந்த ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய படை!

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்தது.

Samayam Tamil 22 May 2019, 8:16 pm
சென்னை: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்தது.
Samayam Tamil Virat Kohli Indian Cricket Team


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கு ம் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.
இரண்டு பயிற்சிப்போட்டி:
இத்தொடருக்கு முன்பாக (மே 25ம் தேதி) நியூஸிலாந்து, வங்கதேசம் (மே 28ம் தேதி) அணிகளுக்கு எதிராக இந்திய அணி, பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை இங்கிலாந்து கிளம்பிச் சென்றனர்.
ரசிகர்கள் உற்சாகம்:
வரும் ஜூன் 5ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை இந்திய அணி எதிர்கொள்கிறது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றடைந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்