ஆப்நகரம்

இலங்கையை நசுக்கி வீசிய டுபிளசி, பிளக்வாயோ...: தென் ஆப்ரிக்கா மிரட்டல் வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

Samayam Tamil 24 May 2019, 11:08 pm
கார்டிப்: இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
Samayam Tamil South Africa


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது.

பயிற்சி போட்டி துவக்கம்:
இந்நிலையில் உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் இன்று துவங்கியது. கார்டிப்பில் நடந்த பயிற்சி போட்டியில் இலங்கை அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி முதலில் ‘பில்டிங்’ தேர்வு செய்தது.
டுபிளசி மிரட்டல்:
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (65), மார்க்ராம் (21) நல்ல துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த டுபிளசி (88) அரைசதம் அடித்து கைகொடுத்தார். கடைசி நேரத்தில் பிளக்வாயோ (35) ஓரளவு கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது.
கருணரத்னே ஆறுதல்:
கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் கருணரத்னே (87), ஏஞ்சலோ மாத்யூஸ் (64), மெண்டிஸ் (37) ஆகியோர் தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதையடுத்து
இலங்கை அணி 42.3 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்