ஆப்நகரம்

Team India: தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ!- இனி தோனி ஆடுவது சந்தேகம்!

தோனி ஓய்வு பெற்றால் நல்லது, இல்லையென்றால் அவரை அணியில் எடுப்பதை தவிர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.

Samayam Tamil 15 Jul 2019, 12:59 pm

உலகக் கோப்பை நேற்று நிறைவு பெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை அதனால் அணிக்கு சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்பட்டதாக கூறி பலர் தோனி ஓய்வு பெறுங்கள் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
Samayam Tamil Dhoni BCCI


தோனியின் பதில்:
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் இது போன்ற பதிவுகளைப் பார்த்து தோனி, நான் எப்போது ஓய்வு பெறுவேன் என எனக்கே தெரியவில்லை என பதிலளித்திருந்தார்.

தோனியை கலற்றிவிட முடிவு!
இந்நிலையில் தோனி தானாக ஓய்வு பெற்றால் நல்லது. அப்படி அவர் செய்ய விரும்பவில்லை என்றால் அவரை அணியில் தானாக தேர்வு செய்யப்படுவது தடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தாலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது எப்படி? ஐசிசி விதி என்ன தான் சொல்கிறது?

தோனி இதுவரை இந்திய அணிக்காக நிறைய சிறப்பான விஷயங்களை செய்துள்ளார். பல சாதனைகளைப் படைத்துள்ளார். தோனி இந்திய அணிக்கு செய்தது போதும், அவர் இனி அவர் எந்த சாதனையும் செய்வதற்கு இல்லை என்பதால் அவர் ஓய்வு பெறுவது நல்லது. அவரால் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால், விரைவில் பிசிசிஐ தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தோனியிடம் இது குறித்து பேசுவார்கள் என தெரிகிறது எனவும் கூறியதாக தெரிகிறது.

‘டை’.. ‘டை’... தட்டித்தூக்கிய இங்கிலாந்து...: புது உலகசாம்பியனாகி அசத்தல்: 44 ஆண்டு கனவு நினைவானது!
உலகக் கோப்பையையில் சொதப்பல்:
இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 10,773 ரன்களும், சராசரி 50.6, ஸ்டிரைக் ரேட் 87.6 என வைத்துள்ளார்.


2019 உலகக் கோப்பை போட்டிகளில் தோனி 273 ரன்களும், சராசரி 45.5, ஸ்டிரைக் ரேட் 87.8 என வைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்