சவுத்தாம்டன்: உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இந்திய பவுலர் பும்ரா வேகத்தில் தென் ஆப்ரிக்கா தெறிக்க, 50 ஓவரில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.
முதல் சவால்:
இதில் இந்திய அணி இன்று சவுத்தாம்டனில் நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் டுபிளசி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
சொதப்பல் துவக்கம்:
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க வீரர்களான ஆம்லா (6), டிகாக் (10) சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த டுபிளசி (38) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த வான் டெர் டுசென் (22), டேவிட் மில்லர் (31), பிளக்வாயோ (34), மோரிஸ் (42) என அனைவரும் தங்களின் சிறப்பான துவக்கத்தை முடிக்க தவற, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்தது.
இதில் இந்திய அணி இன்று சவுத்தாம்டனில் நடக்கும் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் டுபிளசி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க வீரர்களான ஆம்லா (6), டிகாக் (10) சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த டுபிளசி (38) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த வான் டெர் டுசென் (22), டேவிட் மில்லர் (31), பிளக்வாயோ (34), மோரிஸ் (42) என அனைவரும் தங்களின் சிறப்பான துவக்கத்தை முடிக்க தவற, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்தது.