ஆப்நகரம்

சாருலதா பாட்டிக்காக கோலி செய்த செயல்... செம்ம செண்டிமெண்ட்!

லண்டன்: இந்திய ரசிகை சாருலதா பாட்டிக்கு கேப்டன் விராட் கோலி அளித்த வாக்கை காப்பாற்றியுள்ளார்.

Samayam Tamil 4 Jul 2019, 9:51 pm
இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இதன் 40வது லீக் போட்டியில் இந்தியா அணி வங்கதேச அணியை வீழ்த்தியது.
Samayam Tamil Virat Kohli 1


அந்த போட்டியை காண வந்த 87 வயதான பாட்டி சாருலதா ஒரே நாளில் உலகமுழுதும் பிரபலமானார். இந்திய அணியை அந்த வயதிலும் உறசாகப்படுத்திய அந்த பாட்டியை கேப்டன் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் போட்டிக்கு பின் சந்தித்தனர்.


அப்போது சாருலதாவிடம் ஆசி பெற்ற கோலி, இந்திய அணி பங்கேற்கும் மற்ற போட்டிகளுக்கும் வந்து உற்சாகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அந்த பாட்டி தன்னிடம் டிக்கெட் இல்லை என தெரிவிக்க, கோலி நான் டிக்கெட் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதே போலவே இந்திய அணி பங்கேற்கும் மற்ற போட்டிகளுக்கு டிக்கெட் சாருலதா பாட்டிக்கு டிக்கெட் கிடைத்துள்ளதாக அவரின் பேத்தி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்