ஆப்நகரம்

புரட்டி எடுத்த பூரன்: உலக சாதனையை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்: இலங்கை ‘த்ரில்’ வெற்றி!

செஸ்டர் லீ ஸ்டிரீட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Samayam Tamil 2 Jul 2019, 12:33 am

ஹைலைட்ஸ்:

  • சுமார் 2 ஆண்டுக்கு பின் சர்வதேச அளவில் பவுலிங் செய்த மாத்யூஸ் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றினார்.
  • வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரன் சதம் வீணானது.
  • உலகக்கோப்பை அரங்கில் அதிக ரன்களை ஷேஸ் செய்த அணி என்ற உலகசாதனையை வெறும் 24 ரன்களில் விண்டீஸ் அணி இழந்தது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
இங்கிலாந்தில் 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. செஸ்டர் லீ ஸ்டீரீட்டில் நடந்த 39வது லீக் போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தது.

பெர்ணான்டோ சதம்:
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு, குசல் பெரேரா (64) , பெர்ணான்டோ (104) ஆகியோர் கைகொடுக்க இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது.


புரட்டி எடுத்த பூரன்:
இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெயில் (35), அம்ரிஸ் (5), ஹோப் (5) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த ஹேட்மேயர் (29) ஏமாற்றினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய பூரன் (118) சதம் கடந்து அவுட்டானார்.


கேப்டன் ஹோல்டர் (26), பிராத்வெயிட் (8), ஆலன் (51) ஆகியோர் ஓரளவு கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெடுக்கு 315 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்