கார்டிப்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்டெம்பில் பட்டும் பெயில்ஸ் விழுகாத காரணத்தால் இலங்கை அணி கேப்டன் கருணரத்னே அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.
பலமான நியூசி.,:
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில், நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
Quinton de Kock: போல்டான டிகாக்..: அசையாத பெயில்ஸ்.. அதிர்ஷ்டத்தால் தப்பிய டிகாக்!
கருணரத்னே போராட்டம்:
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு, கேப்டன் கருணரத்னே (52*) அரைசதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 29.2 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் இலங்கை அணி ‘பேட்டிங்’ செய்த போது, நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட் வீசிய போட்டியின் 6வது ஓவரின்4வது பந்தை கருணரத்னே தவறவிட, பந்து ஸ்டெம்ப்பிற்கு மிக அருகில் சென்றது.
உறுதி செய்த ரீப்ளே:
ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது, பந்து ஸ்டெம்பில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. பெயில்ஸ் விழுகாத காரணத்தால், கருணரத்னே மற்றொரு வாய்ப்பு பெற்றார். இதை சரியாக பயன்படுத்திய கருணரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் எதிர் முனையில் இவருக்கு கம்பெனி கொடுக்க யாரும் இல்லாத காரணத்தால் இலங்கை அணி, 136 ரன்களுக்கு சுருண்டது.
பலமான நியூசி.,:
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில், நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
Quinton de Kock: போல்டான டிகாக்..: அசையாத பெயில்ஸ்.. அதிர்ஷ்டத்தால் தப்பிய டிகாக்!
கருணரத்னே போராட்டம்:
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு, கேப்டன் கருணரத்னே (52*) அரைசதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 29.2 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது, பந்து ஸ்டெம்பில் பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. பெயில்ஸ் விழுகாத காரணத்தால், கருணரத்னே மற்றொரு வாய்ப்பு பெற்றார். இதை சரியாக பயன்படுத்திய கருணரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் எதிர் முனையில் இவருக்கு கம்பெனி கொடுக்க யாரும் இல்லாத காரணத்தால் இலங்கை அணி, 136 ரன்களுக்கு சுருண்டது.