ஆப்நகரம்

Dimuth Karunaratne:ரோகித் சர்மாவிடம் டியூசன் போங்க... இலங்கை வீரர்களை விளாசிய கேப்டன் கருணரத்னே

இலங்கை அணி தோற்றது குறித்து அந்த அணி கேப்டன் திமுத் கருணரத்னே, ரோகித் சர்மா குறித்து மிகவும் பெருமையாக பேசியுள்ளார்.

Samayam Tamil 7 Jul 2019, 12:46 pm
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்திய அணி இலங்கையை எதிர் கொண்டது.
Samayam Tamil Dimuth Karunaratne

முதலில் ஆடிய இலங்கை அணிக்கு மேத்திவ்ஸ் அசத்தல் சதம் மூலம் 50 ஓவரில் 264 ரன்களை குவித்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா, ராகுலின் அதிரடியில் இலங்கையை துவம்சம் செய்து இந்தியா வெற்றி பெற்றது.

இமயம் தொட்ட ரோகித் சர்மா:
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 111, ரோகித் சர்மா 103 ரன்கள் என இருவரும் சதம் விளாச இந்தியா 43.3 ஓவரிலேயே 265/3 ரன்களை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோகித் 5வது சதம்:
உலகக் கோப்பை தொடரில் ரோலித் சர்மா நேற்று சதம் அடித்ததன் மூலம் 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றார்.

இவ்வளவு சாதனைகள் செய்து அரையிறுதிக்கு நுழைந்த இந்தியா 2019 உலகக் கோப்பையில் கடந்து வந்த பாதை!
கருணரத்னே புகழாரம்:
போட்டி முடிந்த பிறகு பேசிய இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே பேசும் போது, “இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மா இருந்தார். அவர் பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதே சதம் அடிக்க வேண்டும் என்ற ஆவலில் ஆடுவது போல் இருகின்றது.

அவரின் ஆட்டத்தில் எந்த ஒரு பதற்றமும் இல்லை. மிக நிதானமாகவும், மன உறுதியுடன் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்கின்றார். இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்திய அணியின் பெரும் பலமாக இருக்கின்றது.

இலங்கை அணி வீரர்கள் ரோகித் சர்மாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அவரின் மன உறுதியையும், அவரின் பேட்டிங் திறமையை நாம் கற்றுக் கொண்டால் தான் நம் அணிக்கு நல்லது. ரோகித் சர்மா போன்ற வீரரைப் பாராட்டுவதில் எந்த தாறும் இருக்காது.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்