ஆப்நகரம்

Eng vs NZ Final: சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தாலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது எப்படி? ஐசிசி விதி என்ன தான் சொல்கிறது?

இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரிலும் சமன் செய்ததால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி பெற்றது. அப்படி ஐசிசி சூப்பர் ஓவர் விதி என்ன தான் சொல்கிறது தெரியுமா?

Samayam Tamil 15 Jul 2019, 11:56 am

ஐசிசி உலகக் கோப்பை 2019 நேற்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைப்பெற்றது. இந்த போட்டி சமனில் முடிந்தது. சூப்பர் ஓவரும் சமனில் முடியவஏ இங்கிலாந்து அணி அதிக பவுண்டரி அடித்த அணி என்பதின் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil World Cup winner 2019


ஐசிசி விதி என்ன சொல்கிறது?
டி20 போட்டிகளில் அதிக முறை சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில முறை மட்டும் ஒருநாள் போட்டிகளில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. ஆனால் சூப்பர் ஓவரிலும் சமன் ஆன சரித்தம் கிடையாது.

‘டை’.. ‘டை’... தட்டித்தூக்கிய இங்கிலாந்து...: புது உலகசாம்பியனாகி அசத்தல்: 44 ஆண்டு கனவு நினைவானது!
இது போன்ற பிரச்னைகள் எழும் என்பதால் தான் ஐசிசி விதி வகுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒருநாள் அல்லது டி20 போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் மூலம் தீர்மாணிக்காலாம் என்றும், சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்திருந்தால், எந்த அணி அதிக பவுண்டரிகளை அடித்துள்ளதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற விதி உள்ளது.

இங்கிலாந்து வெற்றி:

இந்த விதியின் அடிப்படையில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 16 பவுண்டரிகள் அடித்திருந்தது. சூப்பர் ஓவரில் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 17 பவுண்டரிகள் அடித்திருந்தது.
2வதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து 24 பவுண்டரிகள் அடித்திருந்தது. சூப்பர் ஓவரில் இரு பவுண்டரிகள் உட்பட மொத்தம் 26 பவுண்டரிகள் அடித்திருந்தது.

34 ஆண்டுகால சாதனையை வெறும் 12 ரன்னில் தவறவிட்ட வில்லியம்சன்!


இதன் காரணமாக இங்கிலாந்து 26-17 பவுண்டரி கணக்கில் நியூசிலாந்தை வென்று முதன் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்