ஆப்நகரம்

எந்த பவுலருக்கும் பயம் இல்ல... ஆனா... இந்த ‘ஆர்ச்சர’ நினைச்சா தான் அல்லுவுடுது...: கோலி!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் இளம் ஜோப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய பங்கு வகிப்பார் என இந்திய கேப்டன் விராட் கோலி கணித்துள்ளார்.

Samayam Tamil 24 May 2019, 9:40 pm

ஹைலைட்ஸ்:

  • ஆர்ச்சர் என் விக்கெட்டை கைப்பற்றுவேன் என கூறியது எனக்கு தெரியாது. அவர் அப்படி கூறியிருந்தாலும் அதைப்பற்றி தற்போது கவலைப்பட மாட்டேன்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Virat Kohli
லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் இளம் ஜோப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய பங்கு வகிப்பார் என இந்திய கேப்டன் விராட் கோலி கணித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கும் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.

ஆர்ச்சர் அச்சுறுத்தல்:
இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் இளம் ஜோப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய பங்கு வகிப்பார் என இந்திய கேப்டன் விராட் கோலி கணித்துள்ளார்.
கோலி கணிப்பு:
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ‘ஆர்ச்சர் என் விக்கெட்டை கைப்பற்றுவேன் என கூறியது எனக்கு தெரியாது. அவர் அப்படி கூறியிருந்தாலும் அதைப்பற்றி தற்போது கவலைப்பட மாட்டேன். நான் சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மென் என்றால், ஆர்ச்சர் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பவுலர் தான். என்னைப்பொறுத்தவரையில், ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய ‘எக்ஸ் பேக்டர்’.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்