ஆப்நகரம்

ஆரம்பமே சூப்பர்ல......பயிற்சியின் போது காயமடைந்த இங்கிலாந்து கேப்டன் மார்கன்...!

உலகக்கோப்பைக்கான பயிற்சியில் ஈடுபட்ட போது, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

Samayam Tamil 24 May 2019, 5:49 pm
லண்டன்: உலகக்கோப்பைக்கான பயிற்சியில் ஈடுபட்ட போது, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
Samayam Tamil Eoin-Morgan


இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது.
மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி அடுத்த ஆண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கும் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும்.

இரண்டு பயிற்சிப்போட்டி:
இத்தொடருக்கு முன்பாக (மே 25ம் தேதி) நியூஸிலாந்து, வங்கதேசம் (மே 28ம் தேதி) அணிகளுக்கு எதிராக இந்திய அணி, பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்ட போது, இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் இயான் மார்கனுக்கு, விரலில் காயம் ஏற்பட்டது.
முன் எச்சரிக்கை நடவடிக்கை:
இதையடுத்து உடனடியாக மார்கன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஆனால் இது வெறும் முன் எச்சரிக்கை நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்