உலகக்கோப்பை கனவு இந்திய வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு தயாராகி வருகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்பார்த்தது போலவே கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
அதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு டி-20க்கான அணியில் மட்டும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் இந்திய அணியில் நிரந்தரமான இடம் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுந்தர் கூறுகையில், ‘இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது அற்புத வாய்ப்பு. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணித்தேர்வை பார்க்கும் போது, இந்திய அணியில் எனக்கான போட்டி அதிகரித்துள்ளது.
சாகல், குல்தீப், ரவிந்திர ஜடேஜா, குர்ணால் பாண்டியா, ராகுல் சாகர் என கடுமையான போட்டி நிலவுகிறது. என் இடத்தை தக்கவைத்துக்கொள்வது அவசியம். சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 2 ஆண்டுக்கு மேலாக ஆகியும் இந்திய அணியில் நிரந்தரமான இடம் கிடைக்காதது, வருத்தமாக உள்ளது. ’ என்றார்.
அதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு டி-20க்கான அணியில் மட்டும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் இந்திய அணியில் நிரந்தரமான இடம் கிடைக்காதது வருத்தம் அளிப்பதாக வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுந்தர் கூறுகையில், ‘இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது அற்புத வாய்ப்பு. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணித்தேர்வை பார்க்கும் போது, இந்திய அணியில் எனக்கான போட்டி அதிகரித்துள்ளது.
சாகல், குல்தீப், ரவிந்திர ஜடேஜா, குர்ணால் பாண்டியா, ராகுல் சாகர் என கடுமையான போட்டி நிலவுகிறது. என் இடத்தை தக்கவைத்துக்கொள்வது அவசியம். சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 2 ஆண்டுக்கு மேலாக ஆகியும் இந்திய அணியில் நிரந்தரமான இடம் கிடைக்காதது, வருத்தமாக உள்ளது. ’ என்றார்.