பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பிசிபி) அதிகாரப்பூர்வ இமெயிலுக்கு, தீவிரவாத அமைப்புகள் அல்லாத அடையாளம் தெரியாத பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16ம் தேதி) இமெயில் ஒன்று வந்தது. ஐசிசி.,க்கு தகவல்:
அதில் வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதைப்பார்த்த பிசிபி., உடனடியாக அதை சர்வதேச கிரிக்கெட் போர்டுக்கு (ஐசிசி.,) அனுப்பியது.
அடுத்த 24 மணி நேரம்:
அதே இமெயிலின் காப்பியை பிசிசிஐ.,யும் அடுத்த 24 மணிநேரத்தில் பெற்றது. இதையடுத்து பிசிசிஐ., மத்திய அமைச்சரகம் மூலம் ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இந்திய வீரர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும்படி தெரிவித்துள்ளது.
கொல்லுங்க.....
இது போன்ற மெயில் வந்த தகவலை உறுதி செய்த பிசிசிஐ., அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்லங்கள் என்பது போல இருந்தாகவும் தகவல் தெரிவித்தது.
இதுகுறித்து பிசிசிஐ., சி.இ.ஓ., ராகுல் ஜாக்ரி கூறுகையில், ‘மத்திய அமைச்சகத்துக்கு அந்த மிரட்டல் இமெயிலை அனுப்பினோம். அண்டிகுவா தூதரத்தை தொடர்பு கொண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் படி தெரிவித்துள்ளோம்.’ என்றார்.
வெறும் புரளி...:
இந்த விவகாரத்தில் ஐசிசி., சார்பிலும் பிசிபி., சார்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் அந்த இமெயிலை முழுமையாக படித்த நபர்கள் கூறூகையில், ‘அந்த இமெயிலை கண்டு கலங்க வேண்டிய தேவையில்லை. யார் யாரையோ குறிப்பிட்டு, அனுப்பப்பட்டுள்ளது. அதுவே இது வெறும் புரளி என்பதை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.
நடக்குமா டெஸ்ட் தொடர்:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டது. இதைப்பார்த்த பிசிபி., உடனடியாக அதை சர்வதேச கிரிக்கெட் போர்டுக்கு (ஐசிசி.,) அனுப்பியது.
அடுத்த 24 மணி நேரம்:
அதே இமெயிலின் காப்பியை பிசிசிஐ.,யும் அடுத்த 24 மணிநேரத்தில் பெற்றது. இதையடுத்து பிசிசிஐ., மத்திய அமைச்சரகம் மூலம் ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இந்திய வீரர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும்படி தெரிவித்துள்ளது.
கொல்லுங்க.....
இது போன்ற மெயில் வந்த தகவலை உறுதி செய்த பிசிசிஐ., அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்லங்கள் என்பது போல இருந்தாகவும் தகவல் தெரிவித்தது.
இதுகுறித்து பிசிசிஐ., சி.இ.ஓ., ராகுல் ஜாக்ரி கூறுகையில், ‘மத்திய அமைச்சகத்துக்கு அந்த மிரட்டல் இமெயிலை அனுப்பினோம். அண்டிகுவா தூதரத்தை தொடர்பு கொண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் படி தெரிவித்துள்ளோம்.’ என்றார்.
வெறும் புரளி...:
இந்த விவகாரத்தில் ஐசிசி., சார்பிலும் பிசிபி., சார்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் அந்த இமெயிலை முழுமையாக படித்த நபர்கள் கூறூகையில், ‘அந்த இமெயிலை கண்டு கலங்க வேண்டிய தேவையில்லை. யார் யாரையோ குறிப்பிட்டு, அனுப்பப்பட்டுள்ளது. அதுவே இது வெறும் புரளி என்பதை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.
நடக்குமா டெஸ்ட் தொடர்:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.