ஆப்நகரம்

பர்த் டே ஸ்பெஷல்: மீனவராக வரவேண்டிய கவாஸ்கர் கிரிக்கெட் வீரரான கதை தெரியுமா?

சுனில் கவாஸ்கரின் பிறந்நாளை முன்னிட்டு அவர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 10 Jul 2020, 12:30 pm
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று பெயரெடுத்த சுனில் கவாஸ்கர் இன்று 71ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 125 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று பத்தாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil sunil gavaskar


1949ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி மும்பையில் பிறந்த கவாஸ்கர், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து ‘சன்னி டேஸ்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தில், தனது பிறப்பு பற்றி சில சுவாரசியமான தகவல்களை இடம்பெறச் செய்துள்ளார்.

கவாஸ்கர் பிறந்தபோது அவரின் ஒரு காது மடலில் இயற்கையாகவே சிறிய ஓட்டை அமைந்திருந்தது. அதைக் கண்ட அவரது உறவினர்கள் இது மிகவும் அதிர்ஷ்டமிக்க குழந்தை என்று கருதினர். மறுநாள், காலையில் அக்குழந்தையின் காது மடலில் ஓட்டை இல்லை. குழந்தை மாற்றப்பட்டுள்ளது என்று கூறி மருத்துவர்களிடம் கவாஸ்கரின் தாய் உட்பட அனைவரும் முறையிட்டனர். மருத்துவமனை முழுவதும் சோதனை செய்து பார்த்ததில், காது மடலில் ஓட்டையுடன் இருந்த குழந்தை மீனவப் பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்டது.

England Vs west indies: மே.இ.தீவுகள் அணி நிதான ஆட்டம்...விக்கெட்டை வீழ்த்த போராடும் இங்கிலாந்து பெளலர்கள்!!

குழந்தைகளை குளிக்க வைக்கும்போது ஏற்பட்ட குளறுபடிகளால் குழந்தை மாறியதாக மருத்துவமனை கூறியது. இதனை தன் புத்தகத்தில் குறிப்பிட்ட கவாஸ்கர், “அன்றைய தினம் எனது உறவினர்கள் மட்டும் காது மடலிலிருந்த ஓட்டையை மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால், என்னுடைய விதியே மாறியிருக்கும். நான் ஒரு மீனவராகி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கவாஸ்கரின் தந்தை, அவரது மாமா ஆகியோரும் கிரிக்கெட் வீரர்களாகத் திகழ்ந்தனர். அவரது மாமா மந்திரி, இந்திய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் விளையாடுவதற்காக அவரது மாமா செல்லும் போது கவாஸ்கரும் கூடவே சென்று, கிரிக்கெட் மீது ஈடுபாடுகொண்ட பள்ளி பருவத்தில் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார். தனது கடின உழைப்பால், முப்பை அணியில் இடம்பெற்றார். அதிரடியாக ஆடி சதங்களைக் குவிக்கத் தொடங்கிய கவாஸ்கர் மீது இந்திய அணித் தேர்வாளர்களின் கண்கள் பட்டது.

மிரட்டும் மே.இ.தீவுகள் அணி பந்து வீச்சாளர்கள்... திணறும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்!!

1971ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தில் கவாஸ்கர் முதல்முறையாக இடம்பிடித்தார். தனது அசாத்திய திறமையால் இந்திய அணியின் கேப்டனாக கவாஸ்கர் பொறுப்பேற்றார். 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்தான் கவாஸ்கர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் வரலாற்றில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று பெயரெடுத்த கவாஸ்கர், 125 டெஸ்ட போட்டிகளில் பங்கேற்று 10,122 ரன்களை கடந்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 236 ரன்கள் குவித்துள்ளார். 34 சதம் மற்றும் 45 அரை சதங்களை விளாசித் தள்ளியுள்ளார். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றுள்ள கவாஸ்கர், 2009ஆம் ஆண்டு ஐசிசியின் ஹால் ஆஃப் பேமராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்