ஆப்நகரம்

சிஎஸ்கே நேரலையில் பங்கேற்கும் தல தோனி மனைவி ஷாக்சி!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கேவின் கேப்டனுமான தோனியின் மனைவி ஷாக்சி சிஎஸ்கே இன்ஸ்டா நேரலையில் பங்கேற்கவுள்ளார்.

Samayam Tamil 31 May 2020, 4:19 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஓய்வு தான் தற்போது டிரெண்டிங் டாபிக்காக மாறியுள்ளது. நேற்று திடீரென #DhoniRetires என்ற ஹேஸ்டாக் டிரெண்டாக துவங்கியது.
Samayam Tamil Sakshi Dhoni


கடுப்பான ஷாக்சி
இந்நிலையில் தோனியிடம் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இப்படி சமூக வலைதளத்தில் தவறான தகவல் டிரெண்டாக துவங்கியது அவரின் மனைவி ஷாக்சி கடுப்பாகி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “இது வெறும் வதந்தி தான். லாக்டவுன் காலம் மக்களின் மனநிலையை நிலையில்லாததாக மாற்றியுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

என்ன திட்டம்
இதற்கிடையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இன்ஸ்டா நேரலையில், ஷாக்சி பங்கேற்கவுள்ளார். இதில் தோனியின் ஓய்வு வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், தோனியின் எதிர்கால திட்டம் குறித்தும் ஷாக்சி தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தனது எதிர்கால திட்டம் குறித்து தோனி தெளிவான தகவல் எதுவும் அளிக்காத காரணத்தால், அவரின் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

உமர் அக்மல் மேல்முறையீட்டை விசாரிக்கும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி!

ஐபிஎல் எப்போது
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி இதுவரை பங்கேற்கவில்லை. இதனால் அவரை மீண்டும் கிரிக்கெட் களத்தில் பார்க்க அவரின் ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். இவர் கடந்த 10 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை. இந்நிலையில் இவரால் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்க முடியாது என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர். ஆனால் இந்தாண்டு இறுதியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்