ஆப்நகரம்

குடும்ப உறுப்பினர் இறந்தும் களம் கண்ட வாட்சன்: ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தனது பாட்டி இறந்த தகவல் அறிந்தும் ஐபிஎல் போட்டியில் களம் கண்ட ஷேன் வாட்சனுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

Samayam Tamil 27 Sep 2020, 7:35 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன், தனது பாட்டி இறந்த செய்தி அறிந்தும் சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் களம் கண்டார். தற்போது இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள், வாட்சனை நினைத்து நெகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
Samayam Tamil Shane Watson


யூடியூப் நிகழ்ச்சியில் ஷேன் வாட்சன் கலந்துகொண்டபோது இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்தது. எனது பாட்டி காலமாகிவிட்டார். இந்த இக்கட்டான நிலையில் எனது குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை. இதற்காக, அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன் என்று வாட்சன் தெரிவித்திருந்தார்.

வாட்சன் பேசியபோது, “எனது அம்மாவின் தாயர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் நான் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதற்காக, எனது குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டேன்” எனக் கூறினார்.

என்ன தோனி இப்படி ஏமாத்திட்டீங்க...சென்னை ரசிகர்கள் மீண்டும் சோகம்!

இந்த தகவல் உடனடியாக சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. இதையடுத்து, வாட்சன் உண்மையான போராளி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட போது வாட்சன் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பின் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் 14, 33 ஆகிய ரன்களை எடுத்தார்.

வாட்சனின் போராளி குணத்திற்கு இது மட்டும் சான்று அல்ல. கடந்த வருடம் இறுதிப் போட்டியில், முழங்காலில் ரத்தம் சொட்டச் சொட்ட விளையாடி அனைவரின் அன்பையும் பெற்றவர் வாட்சன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்