ஆப்நகரம்

CSK vs DC: ஏன் தோற்றது சென்னை? தோல்விக்குக் காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்!

பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் சிறப்பாக சோபித்த சென்னை அணி, பீல்டிங்கில் படுமோசமாகச் சொதப்பி, வெற்றி வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.

Samayam Tamil 18 Oct 2020, 9:12 am
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்து, இத்தொடரில் 6 ஆவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது. பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் சிறப்பாக சோபித்த சென்னை அணி, பீல்டிங்கில் படுமோசமாகச் சொதப்பி, வெற்றி வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.
Samayam Tamil three mistakes of csk team against delhi capitals
CSK vs DC: ஏன் தோற்றது சென்னை? தோல்விக்குக் காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்!


முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 179 ரன்கள் குவித்து அசத்தியது. டெல்லி அணியின் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக சோபிக்கத் தவறிய நிலையில், ஷிகர் தவன் உலகத் தரமிக்க வகையில் பேட்டிங் செய்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஷிகர் தவன் 25 மற்றும் 79 ரன்கள் எடுத்திருந்த போது இருமுறை கேட்ச் தவறவிடப்பட்டது. இது தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. சென்னை அணி 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால், அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த மூன்று தவறுகள் பற்றி தற்போது பார்ப்போம்.



​கூடுதல் பௌலர்களை இணைக்காதது:

பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் ஷார்ஜாவில் விக்கெட்கள் வீழ்வது கடினம். இதனால், கேதர் ஜாதவிற்கு பதிலாக ஒரு பௌலரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். கேதர் ஜாதவ் அணியில் இருந்தும், அவரால் களமிறங்க முடியவில்லை. இதனால், இப்போட்டியில் அவரால் எந்த பயனும் ஏற்படவில்லை. அவருக்குப் பதிலாகக் கூடுதல் பௌலர்களை இணைத்திருந்தால், டெத் ஓவர்களில் சென்னை அணிக்கு உதவிகரமாக இருந்திருக்கும்.

​துவக்கத்தில் நிதானமாக விளையாடியது:

சென்னை அணி முதல் ஓவரிலேயே சாம் கரனை இழந்ததால், மற்றவர்கள் நிதானமாக விளையாடத் தொடங்கினர். ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ பிளஸி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினாலும், அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கத் தவறினர். 9 ஓவர்கள் முடிவில் வெறும் 56 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்திருந்தது. இதனால், 200 வரை செல்ல வேண்டிய ஸ்கோர் 179வரை மட்டுமே நகர்ந்தது.

ஃ​பீல்டிங்கில் சொதப்பியது:

டெல்லி அணி 180 ரன்கள் இலக்கை துரத்திக்கொண்டு சென்றபோது, துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஷிகர் தவன் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த போது, அவர் அடித்த இரண்டு கேட்ச்களை சென்னை அணி வீரர்கள் பிடிக்கத்தவறினர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஷிகர் தவன் ரன் மழை பொழிந்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து, டெல்லி அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்