ஆப்நகரம்

சென்னை அணி தோற்கக் காரணம் இதுதான்... முக்கியமான மூன்று தவறுகள்

தொடர்ந்து இதேபோல் செயல்பட்டால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு பாதிக்கும் என்பதால், தவறுகளை உடனே சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

Samayam Tamil 11 Oct 2020, 8:49 am
ஐபிஎல் 13ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து கவலைக்குரிய நிலையில் உள்ளது. முதலில் பந்துவீசிய சென்னை அணி, துவக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டு முக்கிய விக்கெட்களை கைப்பற்றி ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தது. இருப்பினும், டெத் ஓவர்களின் கடைசி 18 பந்தில் 52 ரன்களை விட்டுக்கொடுத்ததால், பெங்களூர் அணி 169 ரன்கள் சேர்த்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Samayam Tamil what are the three mistakes caused csk to loose in ipl
சென்னை அணி தோற்கக் காரணம் இதுதான்... முக்கியமான மூன்று தவறுகள்


170 ரன்களை துரத்தி களமிறங்கிய சென்னை அணி, பேட்டிங்கில் படுமோசமாகச் சொதப்பியது. குறிப்பாக, கடைசி பத்து ஓவர்களில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினர். தொடர்ந்து இதேபோல் செயல்பட்டால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு பாதிக்கும் என்பதால், தவறுகளை உடனே சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

சென்னை அணியின் வெற்றியைப் பாதித்த மூன்று முக்கிய தவறுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

​முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்:

சென்னை அணியின் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடித்து ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷேன் வாட்சன், ஃபாஃப் டு பிளஸி இவரும் பவர் பிளே ஓவர்களில் ஆட்டமிழந்தது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால், மீண்டும் ஒருமுறை சேசிங்கில் தோல்வி கண்டது.

​டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது:

சென்னை அணி பந்து வீச்சாளர்கள் 16ஆவது ஓவர் வரை சிறப்பாகப் பந்து வீசினர். இதனால், பெங்களூர் அணி ரன்களை குவிக்கத் திணறியது. ஓவருக்கு 6 ரன்கள் வீதம் மட்டுமே ரன்கள் சென்றது. இடையில் ஆரோன் ஃபிஞ்ச், தேவ்தத் படிக்கல் மற்றும் டிவிலியர்ஸ் போன்றவர்கள் விக்கெட்களும் சாய்ந்தது. ஆனால், அணியின் ஸ்கோர் 150 சென்றாலே ஆச்சரியம் எனப் பார்க்கப்பட்ட நிலையில் டெத் ஓவர்களில் ரன்களை மழை பொழிந்தது. கடைசி 18 பந்துகளில் 52 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது, சென்னை அணியின் தோல்விக்கு இது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

​ஒட்டுமொத்தமாக சொதப்பும் வீரர்கள்:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாகப் பார்க்கப்படுகிறது. 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, மூன்று முறை கோப்பை வென்று அசத்தியுள்ளது. ஆனால், இந்த சீசனில் அணி முற்றிலும் மாறுதல் அடைந்து தோல்விகளைக் குவித்து வருகிறது.


அணியில் ஒட்டுமொத்த வீரர்களும், அதாவது பௌலிங், பேட்டிங் என அனைத்திலும் சொதப்பி வருவதால் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் எழலாம் எனக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்