ஆப்நகரம்

கடைசி நேர ட்விஸ்ட்... ஏலத்திலிருந்து விலகிய சிஎஸ்கே வீரர்!

ஐபிஎல் ஏலத்திலிருந்து இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.

Samayam Tamil 18 Feb 2021, 12:32 pm
இன்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கவுள்ள ஐபிஎல் ஏலத்தில் 164 இந்திய வீரர்கள், 124 வெளி நாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், இந்த ஏலத்தில் தான் பங்கேற்க விரும்பவில்லை, தனது பெயரை நீக்கிவிடுங்கள் என இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். இவரது அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil mark wood


இவர் இதுவரை 18 டெஸ்ட், 53 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது, இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரேயொரு போட்டியில் களமிறங்கிய இவரது பெயர், ஏலத்தில் 24ஆவது இடத்தில் இருந்த நிலையில் அது நீக்கப்பட்டுள்ளது.

IPL: நமக்கு டெஸ்ட் வீரரே போதும்... மும்பை இந்தியன்ஸின் பலே திட்டம்!
இங்கிலாந்து அணி பயிற்சியாளர் சில்வர்வுட் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “இங்கிலாந்து அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதனால் வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு கொடுத்து வருகிறோம். இந்நிலையில், அவர்கள் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கவுள்ளார்கள். இது நிச்சயம் பணிச்சுமையை அதிகரிக்கும். வீரர்களை ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டாம் எனச் சொல்வதற்கு கஷ்டமாக உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மார்க் வுட் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்