ஆப்நகரம்

அதிரடி காட்ட முடியாததற்கு காரணம் இருக்கு: தோனி ஓபன் டாக்

அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்திற்கு மைதானம் எப்படி ஒத்துழைக்கிறது என்பதைத் தெளிவாகக் கணித்துப் பார்த்து பந்து வீசினர்”

Samayam Tamil 23 Sep 2020, 12:27 pm
சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா தாக்கியதால், கூடுதலாக இரண்டு வாரங்கள் தனிமை முகாமில் பொழுதைக் கழித்தனர். இதன் காரணமாகத்தான், அதிரடி காட்டமுடியவில்லை என்று ராஜஸ்தானுக்கு எதிராக 17 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dhoni



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சகார், ருதுராஜ் கெய்க்வாட் உட்பட 13 பேருக்கு கொரோனா தாக்கியதால், தோனி உட்பட அனைத்து வீரர்களும் கூடுதலாக இரண்டு வாரங்கள் தனிமை முகாமில் அடைபட்டனர். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு இதுவும் முக்கிய காரணம் என்கிறார் கூல் கேப்டன்.

ராஜஸ்தான் அணி 216 ரன்கள் குவித்ததால், தோனி முதல் வரிசையில் களமிறங்கி அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 7ஆவது வீரராக களம் கண்டு ஆர்ச்சயமளித்தார். இதுகுறித்து பேசிய அவர், “நான் ரொம்ப நாளா பேட்டிங் ஆடல, சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா தாக்கியதால் கூடுதலாக 14 நாட்கள் தனிமை முகாமில் அடைபட்டோம். இதனால்தான், முதல் வரிசையில் களம் காணாமல் 7ஆவது வீரராக களமிறங்கினேன்” என்றார்.

சென்னைக்கு வில்லனாக மாறிய டெத் ஓவர்; எப்படி போட்டாலும் அடிக்குறாங்க பாஸ்!

சென்னை அணி தோல்வியை தழுவியதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார். தொடக்க வீரராகக் களம் கண்ட முரளி விஜய் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டும்தான் எடுத்தார். கூடுதலாக ரன் சேர்த்திருந்தால் நிச்சயம் வெற்றிபெற வாய்ப்பிருந்திருக்கும். அதேபோல், பியூஷ் சாவ்லா, ஜடேஜா சுழல் எடுபடாததும் தோல்விக்குக் காரங்களாக அமைந்தது என கூறினார்.

“217 ரன்களை துரத்தி வெற்றிபெற உறுதியுடன்தான் இருந்தோம். ஆனால், தொடக்கத்தில் தொய்வு ஏற்பட்டது தோல்விக்கு வித்திட்டது. சஞ்சு சாம்சன், ஸ்மித் ஆகியோர் அபாரமாக விளையாடினர். அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்திற்கு மைதானம் எப்படி ஒத்துழைக்கிறது என்பதைத் தெளிவாகக் கணித்துப் பார்த்து பந்து வீசினர்” என தெரிவித்தார்.

“ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஃப் திசையில் பந்து வீசினர். அதனால், ரன்கள் குவிக்கச் சிரமமாக இருந்தது. எங்கள் அணி ஸ்பின்னர்களும் சிறப்பாகச் செயல்பட முயற்ச்சித்தனர். 200 ரன்களுக்குள் சுருக்கியிருந்தால், நாங்கள் நிச்சயம் வெற்றிபெற்றிருப்போம்” என கூறினார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்