ஆப்நகரம்

ஐபிஎல் போட்டியில் அதிக ரன் எடுத்த ரிஷப் பண்டுக்கு ஒரு ரன்னுக்கு ஒரு லட்சம்!

ஐபிஎல் 11வது சீசன் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்று பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்குகிறது.

Samayam Tamil 22 May 2018, 11:31 am
புதுடெல்லி : ஐபிஎல் 11வது சீசன் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்று பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்குகிறது.
Samayam Tamil Rishabh-Pant


இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தாலும், அந்த அணியின் ரிஷப் பண்ட் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இவர் 14 போட்டியில் பேட்டிங் செய்து 684 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 128* ரன்கள் எடுத்து சராசரி 52.61 என வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 173.60 என அட்டகாசப்படுத்தியுள்ளார்.

ஒரு சதம், 5 அரைசதம், 37 சிக்ஸர், 68 பவுண்டரிகள் விளாசி ரசிகர்களுக்கு விருந்துபடைத்துள்ளார்.

ஒரு ரன்னுக்கு ஒரு லட்சம்;

ரிஷப் பண்ட் டெல்லி அணியால் 8 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துக் கொள்ளப்பட்டார். அதன் படி இவர் விளாசிய 684 ரன்களை கணக்கிட்டால் அவர் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1.17 லட்சம் பெற்றுள்ளார்.

பல கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட பல பேட்ஸ்மேன்கள் சோபிக்காத நிலையில் பண்ட் மிக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்