ஐபிஎல் 14ஆவது சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா 54 (36), மொயின் அலி 36 (24) போன்றவர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்தார்கள். இறுதியில் சிஎஸ்கே 188/7 ரன்கள் சேர்த்தது.
இலக்கைத் துரத்தி களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர்கள் பிரித்வி ஷா 71 (38), ஷிகர் தவன் 85 (54) இருவரும் ரன் மழை பொழிந்து அணிக்கு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.
தற்போது, இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த மூன்று முக்கியத் தவறுகள் குறித்துப் பார்ப்போம்.
ஓபனர்கள் சொதப்பல்:
சிஎஸ்கே துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களும், ஃபாஃப் டூ பிளஸி ரன்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். இதனால், அடுத்துக் களமிறங்கியவர்கள் அதிரடியாக விளையாட தயங்கி, விக்கெட்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினர். இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே 33 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இருவரில் ஒருவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், பவர் பிளேவில் அதிக ரன்கள் அடித்திருக்க முடியும். ஸ்கோரும் 200 ரன்களை கடந்திருக்கும்.
பவர் பிளேவில் அதிக ரன்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் பவர் பிளே ஓவர்களில் வேகம் குறைந்த பந்துகளை அதிகம் பயன்படுத்தினர். சில பந்துகள் சரியான திசையில் சென்றாலும், பல பந்துகள் ஸ்லாட், லோ ஃபுள்டாஸாக சென்றது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட பேட்ஸ்மேன்கள் முதல் 6 ஓவர்களில் ரன் மழை பொழிந்து 65 ரன்கள் சேர்த்தனர். இதனால், சிஎஸ்கேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பிரித்வி, தவன் பார்ட்னர்ஷிப்:
பவர் பிளேவில் பிரித்வி ஷா, ஷிகவர் தவன் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டதால், அடுத்து அழுத்தங்கள் இன்றி பேட்டிங் செய்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை விரைந்து யாராலும் பிரிக்க இயலவில்லை. ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி இருவரும் ரன்களை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற மனநிலையில் மட்டும் பந்துவீசியதுபோல் இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா 54 (36), மொயின் அலி 36 (24) போன்றவர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்தார்கள். இறுதியில் சிஎஸ்கே 188/7 ரன்கள் சேர்த்தது.
இலக்கைத் துரத்தி களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர்கள் பிரித்வி ஷா 71 (38), ஷிகர் தவன் 85 (54) இருவரும் ரன் மழை பொழிந்து அணிக்கு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.
தற்போது, இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த மூன்று முக்கியத் தவறுகள் குறித்துப் பார்ப்போம்.
ஓபனர்கள் சொதப்பல்:
சிஎஸ்கே துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களும், ஃபாஃப் டூ பிளஸி ரன்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். இதனால், அடுத்துக் களமிறங்கியவர்கள் அதிரடியாக விளையாட தயங்கி, விக்கெட்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினர். இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே 33 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இருவரில் ஒருவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், பவர் பிளேவில் அதிக ரன்கள் அடித்திருக்க முடியும். ஸ்கோரும் 200 ரன்களை கடந்திருக்கும்.
பவர் பிளேவில் அதிக ரன்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் பவர் பிளே ஓவர்களில் வேகம் குறைந்த பந்துகளை அதிகம் பயன்படுத்தினர். சில பந்துகள் சரியான திசையில் சென்றாலும், பல பந்துகள் ஸ்லாட், லோ ஃபுள்டாஸாக சென்றது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட பேட்ஸ்மேன்கள் முதல் 6 ஓவர்களில் ரன் மழை பொழிந்து 65 ரன்கள் சேர்த்தனர். இதனால், சிஎஸ்கேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பிரித்வி, தவன் பார்ட்னர்ஷிப்:
பவர் பிளேவில் பிரித்வி ஷா, ஷிகவர் தவன் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டதால், அடுத்து அழுத்தங்கள் இன்றி பேட்டிங் செய்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை விரைந்து யாராலும் பிரிக்க இயலவில்லை. ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி இருவரும் ரன்களை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற மனநிலையில் மட்டும் பந்துவீசியதுபோல் இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.