ஆப்நகரம்

IPL 2022: டெல்லி கேபிடல்ஸ் தக்கவைக்கப் போகும் 3 வீரர்கள்…பௌலருக்கு ஜாக்பாட்?

டெல்லி அணி யார் தக்கவைக்கப் போகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Oct 2021, 10:51 am
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி இன்னும் ஒருமுறைகூட கோப்பை வெல்லவில்லை. 13ஆவது சீசனில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய அந்த அணி, 14ஆவது சீசனின் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தது. ஆனால், பிளே ஆஃப் சுற்றில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால், அடுத்த சீசனிலாவது கோப்பை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி நிர்வாகம் இருக்கிறது.
Samayam Tamil 3 players delhi capitals might retain ahead of ipl 2022
IPL 2022: டெல்லி கேபிடல்ஸ் தக்கவைக்கப் போகும் 3 வீரர்கள்…பௌலருக்கு ஜாக்பாட்?


அடுத்த சீசன் முதல் கூடுதலாக இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் வரை பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால், அந்த புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது, டெல்லி கேபிடல்ஸ் அணி யார் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

3)ஆன்ரிக் நோர்க்கியா:

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான இவர், தனது அசுர பந்துவீச்சு காரணமாக ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடியவர். இவரால் தொடர்ந்து 140+ வேகத்தில் பந்துவீச முடியும். டெத் ஓவர்களில் சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுக்க கூடியவர். ஏலத்தின்போது, எப்படிப்பட்ட பௌலர்கள் கிடைப்பார்கள் என தெரியாத காரணத்தினால் முன்னெச்சரிக்கை காரணமாக இவர் தக்கவைக்கப்படுவார் என தகவல் கசிந்துள்ளது.

2)ரிஷப் பந்த்:

ஸ்ரேயஷ் ஐயர் காயத்தால் அவதிப்பட்டு, போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை இருந்தபோது டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பந்த் சிறப்பாக வழிநடத்தினார். பேட்டிங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அதேபோல், விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவர் தக்கவைக்கப்படுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

1)ஸ்ரேயஷ் ஐயர்:

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயஷ் ஐயர், காயம் காரணமாக ஐபிஎல் 14ஆவது சீசனின் முதல் பாதி ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. இதனால் ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அடுத்த வருடம் மீண்டும் ஸ்ரேயஷ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்