ஆப்நகரம்

அம்பயருடன் வம்பு செய்த தோனிக்கு தமிழரின் பரிசு!

2019 ஐபிஎல் டி20 தொடரில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி அம்பயரின் முடிவுக்கு எதிராக வாக்குவாதம் செய்தார் அபராதம் விதிக்கப்பட்டார்.

Samayam Tamil 5 May 2019, 3:18 pm
ஆட்டத்தின் குறுக்கே புகுந்து அம்யருடன் வாக்குவாதம் செய்த தோனியின் பிரம்மாண்டமான படம் தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பேருந்தில் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil 63160


2019 ஐபிஎல் டி20 தொடரில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி அம்பயரின் முடிவுக்கு எதிராக வாக்குவாதம் செய்தார் அபராதம் விதிக்கப்பட்டார்.

அந்தப் போட்டியில் சென்னை அணி சேஸ் செய்தபோது கடைசி ஓவரில் வீசப்பட்ட ஒரு பந்தை அம்பயர் நோ பால் கொடுத்துவிட்டு, உடனே திரும்ப பெற்றார். சற்று நேரத்துக்கு முன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்த தோனி இதைப் பார்த்து கடுப்பாகி மைதானத்தில் புகுந்து அம்பயர்களுடன் வாக்குவதம் செய்தார்.

‘கூல்’ கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி கோபத்தில் விதிகளை மறந்துவிட்டு அம்பயரின் முடிவில் தலையிட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்தச் செயலுக்காக தோனிக்கு கண்டனம் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம், கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கத்தை மீறியதாக, அந்தப் போட்டிக்கான சம்பளத்தில் 50% பணத்தை அபராதமாகச் செலுத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், தோனி அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சியின் படத்தை தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் பேருந்து முழுக்க மிகப்பெரிய அளவில் வரைந்துள்ளார். கரூர், நாமக்கல் பகுதியில் இயங்கும் அந்தப் பேருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்