ஆப்நகரம்

IPL 2022: ‘அகமதாபாத் அணி’…பயிற்சியாளராக இந்திய ‘அனுபவ’ வீரர் தேர்வு? ரவி சாஸ்திரி கிடையாதாம்!

அகமதாபாத் அணிக்கு இந்திய அனுபவ வீரர் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 4 Jan 2022, 7:06 am
ஐபிஎல் 14ஆவது சீசன் முடிந்த உடன், புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு 15ஆவது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த புதிய இரண்டு அணிகளுக்கான ஏலம் அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது. சஞ்சீவ் கோயங்கா குழுமம் 7,090 கோடிக்கு லக்னோ அணியையும், சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளன.
Samayam Tamil ஐபிஎல் 2022


இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இருக்கும் 8 ஐபிஎல் அணிகள், பிசிசிஐ விதிமுறைகளுக்கு உட்பட்டு நான்கு வீரர்கள் வரை தக்கவைத்து, அதனை அறிவித்தது. புதிதாக இணைந்துள்ள அகமதாபாத், லக்னோ அணிகள், ஜனவரி 20ஆம் தேதிக்குள் 2 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளி நாட்டு வீரரை தக்கவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்?

இந்த புதிய அணிகள், யார் யாரை தக்கவைப்பது என்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், அகமதாபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பௌலிங் கோச்சாக பரத் அருண், பீல்டிங் கோச்சாக ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் செயல்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, “இது பொய் செய்தி. எனக்கு தற்போது ஓய்வு தேவை. மீண்டும் பயிற்சியாளராக செயல்படுவது குறித்து நான் இன்னும் யோசித்துக் கூட பார்க்கவில்லை. தொலைக்காட்சி வர்ணனைதான் எனக்கு பிடித்தமான பணி” எனத் தெரிவித்தார்.

ஆஷிஸ் நெக்ரா:

இந்நிலையில், அகமதாபாத் அணிக்கு ஆஷிஸ் நெக்ரா தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அணியின் இயக்குநராக இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் விக்ரம் சோலாங்கியும், ஆலோசகராக, 2011-ல் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வென்றுகொடுத்த பயிற்சியாளர் ஹேரி கிறிஸ்டனும் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அந்த அணி நிர்வாகம் உடனே அறிவிக்க முடியாது. பிசிசிஐயிடம் முறையான அனுமதி பெற்ற பிறகுதான் அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்