ஆப்நகரம்

‘போராடி பாத்தோம்’…கை நல்லா சிக்கியிருந்துச்சு’…சைமண்ட்ஸின் கடைசி நிமிடம்: காப்பாற்ற சென்றவர் தகவல்!

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்று முன்தினம் கார் விபத்தில் காலமானார்.

Samayam Tamil 17 May 2022, 7:41 am
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) நேற்று முன்தினம் சாலை விபத்தில் காலமானார். சரியாக இரவு 10:30 மணியளவில், இந்திய நேரப்படி மாலை 7 மணியளவில் அவர் கார் விபத்தில் சிக்கியதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்


சம்பவ இடத்திலேயே பலி!

காரில் அவர் மட்டுமே பயணித்திருக்கிறார். டவுன்ஸ்வில் நகரத்தின் ஆலிஸ் ஆற்றுப்பாலத்தில் சென்றபோது, அந்த பாலம் முடிந்து சாலை இடது பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனால் அதிவேகமாக சென்ற சைமண்ட்ஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து உருண்டு விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளானபோது, அருகில் இருந்த சிலர் உடனே உதவி செய்ய சென்றுள்ளனர். ஆனால், சைமண்ட்ஸ் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காப்பாற்ற சென்றவர் தகவல்:

இந்நிலையில் சைமண்ட்ஸை காப்பாற்ற சென்றவர், என்ன நடந்தது என்பது குறித்து முதல்முறையாக விளக்கமாகப் பேசியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிகொடுத்த அவர், ‘‘சைமண்ட்ஸ் காருக்குள் நன்றாக சிக்கியிருந்தார். அவரை வெளியே இழுக்க கடுமையாக போராடினோன். அதன்பின்னர் நீண்ட போரட்டத்துக்கு பிறகு அவரை மீட்டு, CPR எனப்படும் முதலுதவியை செய்து, அவரது உயிர்நாடியை சோதனை செய்தேன்’’ எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘‘ஆனால், சைமண்ட்ஸிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கடைசி நேரத்தில் கடுமையாக முயற்சி செய்தோம். கண்முன்னே உயிர் பிரிந்துவிட்டது’’ எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்