ஆப்நகரம்

ஐபிஎல்: ஆடுகளத்தில் போராட்டம் நடத்திய தமிழன்

மும்பை – சென்னை இடையேயான ஐ.பி.எல். போட்டியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வாசகத்துடன் ரசிகர் ஒருவா் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.

Samayam Tamil 8 Apr 2018, 2:01 am
மும்பை – சென்னை இடையேயான ஐ.பி.எல். போட்டியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வாசகத்துடன் ரசிகர் ஒருவா் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.
Samayam Tamil Ban Sterlite.


11வது ஐ.பி.எல். திருவிழா மும்பையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய மும்பை அணி 165 ரன்கள் எடுத்தது. பின்னா் களம் இறங்கிய சென்னை அணி பிராவோவின் சிக்சா் மழையால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவோ அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 68 ரன்கள் (7 சிக்சா்) குவித்தாா்.

மேலும் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தொடா்ந்து 55 நாட்களுக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் போராட்டம் தொடா்பாக தமிழக அரசு எந்தவித உறுதிமொழியையும் வழங்க மறுக்கிறது. இதனால் தூத்துக்குடி மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில் ஸ்டொ்லைட் பிரச்சினை அனைத்து தரப்பினருக்கும் தெரியவேண்டும் என்றால் ஐ.பி.எல். போட்டியை புறக்கணியுங்கள் என்ற வாசகம் பரவலாக பகிரப்பட்டு வந்தது. இதுபோன்ற கருத்து பரவி வரும் நிலையில் சென்னை – மும்பை இடையேயான போட்டியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான வாசகத்துடன் (BAN STERLITE) ரசிகா் மைதானத்தில் வலம் வந்தாா்.

போட்டிக்கிடையே ரசிகரின் நடவடிக்கை பிறரது கவனத்தை வெகுவாக ஈா்த்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்